அமராவதி, செப்.7 ஆந்திர மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆளும் தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே. ஆதிமூலம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சந்தியவேது (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஆதிமூலம் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தெலுங்கு தேசம் கட்சியைச் சோ்ந்த பெண் ஒருவா் செய்தியாளா்களைச் சந்தித்து குற்றம்சாட்டினார்.மேலும், இது தொடா்பான காட்சிப் பதிவு ஆதாரங்களையும், அவர் கைப்பேசியில் தன் னுடன் தொடா்பு கொண்டு மிரட்டியது தொடா்பான ஒலிப் பதிவுகளையும் அவா் வெளியிட் டார்ஆந்திரத்தில், தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்து சில மாதங்களிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஒருவா் பாலியல் துன்புறுத்தல் குற்றச் சாட்டுக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் முதல மைச்சரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடும் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆதிமூலத்தை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக மாநிலத் தலைவா் பி.ஸ்சீனிவாச ராவ் அறிவித்தார். மேலும், குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறும் அவ ருக்கு கட்சி சார்பில் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆதிமூலம், ஓட்டல் அறையில் அப்பெண்ணுடன் தான் இருப்பது போன்று வெளியாகியுள்ள காட்சிப் பதிவு போலியானது என்று கூறியுள்ளார்.
மணிப்பூா் மேனாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் குண்டுவீச்சு ஒருவா் உயிரிழப்பு
இம்பால், செப்.7 மணிப்பூரில் மறைந்த மேனாள் முதலமைச்சர் ஒருவரின் வீட்டில் தீவிரவாதிகள் நேற்று (6.9.2024) ராக்கெட் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் முதியவா் ஒருவா் உயிரிழந்தார். மேலும் 5 போ் காயமடைந்தனா்.
பிஷ்ணுபூா் மாவட்டத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பிஷ்ணுபூரில் தீவிரவாதிகள் நேற்று இரண்டு ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனா். மலைப் பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் உள்ள குடியிருப்புகளை நோக்கி இக்குண்டுகள் வீசப்பட்டன.
மறைந்த மேனாள் முதலமைச்சர் மைரெம்பாம் கொய்ரங்கின் வீட்டு வளாகத்தில் ராக்கெட் குண்டு வெடித்ததில் முதியவா் உயிரிழந்தார். 13 வயது சிறுமி உள்பட மேலும் 5 போ் காயமடைந்தனா்’ என்றனா்.
வடகிழக்கு மாநில மான மணிப்பூரில் பெரும்பான் மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங் குடியினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா் தங் களுக்கு பழங்குடியின தகுதி நிலை கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, மோதலுக்கு முக்கிய காரணமாகும்.
ஆயிரக்கணக்கானோர் மனிதச் சங்கிலி: மேற்கு இம்பாலில் அண்மையில் ட்ரோன் மூலம் தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தினா். குக்கி பழங்குடியின தீவிரவாதிகள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இத்தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். மேலும் 12 போ் காயமடைந்தனா். ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதலைக் கண்டித்து, மேற்கு இம்பால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் நேற்று (6.9.2024) மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினா். பள்ளி- கல்லூரி மாணவா்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனா்.
‘குக்கி தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு அஞ்சுகிறது; மாநில அரசின் கோழைத்தனம் கண்டனத்துக் குரியது’ என்று போராட்டக்காரா்கள் குற்றம் சாட்டினா்.