மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவி வெற்றிவாகை

Viduthalai
1 Min Read

ஜெயங்கொண்டம், செப்.7- தந்தை பெரி யாரின் 146ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வண்ண மாக பெரியாரின் சிந் தனைகளை விரிவுபடுத் தவும், இன்றைய மாணவர் சமுதாயம் பகுத்தறிவோடு சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும், தமிழறிவினை பெற வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு அரசால் மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. அப்போட்டி யில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவி
ஆர்.கே.விஸ்வதர்ஷினி கலந்து கொண்டு மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றி பெற்ற மாண விக்கு சான்றிதழையும், இரண்டாயிரம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி தமிழ் வளர்ச்சி துறை சிறப்பித்துள்ளது. வெற்றி பெற்ற மாண விக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள், மற்றும் பெற் றோர்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித் தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *