கண்ணீர் விட்டு கதறும் பா.ஜ.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

Viduthalai
1 Min Read

சண்டிகர், செப்.7- அரியானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக் காததால் பாஜக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கண்ணீர் விட்டு அழுத காட்சிப் பதிவு வைரல் ஆகிஉள்ளது.
அரியானா சட்டப் மன்றத்திற்கு வரும் அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில்தனது பெயர் இடம்பெறாததால், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஷசி ரஞ்சன் பார்மர் கண்ணீர் விட்டு அழுவது போன்ற காட்சிப் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த காட்சிப் பதிவில், ரஞ்சனிடம் ஒரு செய்தியாளர் பேட்டி எடுக்கிறார். அப்போது, பாஜக வேட்பாளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாதது ஏன் என கேட்கிறார்.
அதற்கு, ரஞ்சன், “நான் பிவானி அல்லது டோஷம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தேன். என்னுடைய பெயர் பட்டியலில் இடம்பெறும் என நினைத்திருந்தேன். ஆனால் என் பெயர் இல்லை”என கூறிவிட்டு அழுகிறார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *