கழகக் களத்தில்…!

1 Min Read

8.9.2024 ஞாயிற்றுக்கிழமை
கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
பொன்னேரி: காலை 11 மணி * இடம்: பொன்னேரி கலைஞர் அரங்கம் * தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா சேர்ப்பு, கழக செயல்பாடுகள் குறித்து * நன்றியுரை: ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்) * விழைவு: நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி தோழர்கள் அனைவரும் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

9.9.2024 திங்கட்கிழமை
திருத்துறைப்பூண்டி, கோட்டூர், தலைஞாயிறு, முத்துப்பேட்டை,
ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம்
விளக்குடி: மாலை 04:00 மணி * இடம்: விளக்குடி ஒன்றிய துணை செயலாளர் ந.செல்வம் இல்லம் * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்) *முன்னிலை: ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க துணைத் தலைவர்), ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்) * பொருள்: தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சுற்றுப்பயண விவரங்கள் சம்பந்தமாக….. *நன்றியுரை: ப.சம்பத்குமார் (நகர துணை செயலாளர்)

வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன்-
மு.தமிழ்மொழி அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா – பணி நிறைவு பாராட்டு விழா
சென்னை: காலை 11.00 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அ.இளங்கோவன் (செய்யாறு மாவட்டக் கழகத் தலைவர்), தி.காமராசன் (செய்யாறு நகர கழகத் தலைவர்), வேல்.சோ.நெடுமாறன் (மாநில ப.க. துணைத் தலைவர்) *வரவேற்பு: மு.தென்னரசு (துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஆரணி)*வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: வி.தேவகுமார் (வேதா மெடிக்கல்ஸ், செய்யாறு) *விழைவு: அனைவரையும் வரவேற்கிறோம் *இவண்: வெ.எழில்மதி-அய்யப்பன், வெ.இளஞ்செழியன், அ.மகிழன் செய்யாறு, வடமணப்பாக்கம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *