பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யசிறீ சிவன் அவர்களுக்கு பகுதி குடியிருப்பு நலச்சங்கங்கள் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு

1 Min Read

ஒசூர் உள்வட்ட சாலை தந்தை பெரியார் சதுக்கம் பகுதியில் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யசிறீ சிவன் அவர்களுக்கு பகுதி குடியிருப்பு நலச்சங்கங்கள் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தந்தை பெரியார் நூல்களை வழங்கி பயனாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் என்.எஸ்.மாதேஸ்வரன், தேவி மாதேஷ், காங்கிரஸ் மாநகர தலைவர் சி.தியகராஜன், கழக மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி, பகுத்தறிவு கலைத்துறை மாவட்ட அமைப்பாளர் மனோகரன், வழக்குரைஞர்கள் ரூபன்,க.கா.வெற்றி, தந்தை பெரியார் சதுக்கம் பகுதியில் சுற்றியுள்ள குடியிருப்பு நலச்சங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *