மதுரை புத்தகத் திருவிழாவில் பக்திப் பாடலைக் கேட்டு திடீரென ‘சாமி ஆடிய’ மாணவிகள்?
மதுரை, செப்.7- மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி. ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மய்யத்தில் நேற்று (6.9.2024) தொடங்கியது.
நேற்று (6.9.2024) தொடங்கி 11 நாட்கள், 16 ஆம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. நாள்தோறும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை புத்தக திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தக திருவிழாவில் நாள்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், நேற்று (6.9.2024) புத்தக திருவிழா வின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போது பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அதைக் கேட்டு புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த சில மாணவிகள், திடீரென சாமி ஆடத் தொடங்கினர். அதில் சிலர் மயங்கி விழுந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவர்களை இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் அந்த மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர்கள் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
-தினத்தந்தி இணையம், 6.9.2024
இதைவிட புதுவகை ‘‘வித்தைகள்‘‘ மூடநம்பிக்கை யைப் பரப்புவதற்கு வேண்டுமா?
தமிழ்நாடு அரசு, அறிவுத் திருவிழாவில் இப்படிப்பட்ட அனர்த்தங்களை அனுமதிக்கலாமா?
உரியவர்களின் காவிச் சாயத்தை மாற்ற
உரிய நடவடிக்கை தேவை!