செபியின் தலைவரை எதிர்த்து மும்பையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2 Min Read

மும்பை, செப்.6 இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியம் செபியின் தலைவராக பணியாற்றி வரும் மாதபி புரி புச் மீது, ஹிண்டன்பர்க் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தது. அதில், தொழிலதிபர் அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி புரிபுச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தன் மீதான குற்றச் சாட்டை செபி தலைவர் மறுத்தார்.

ஹிண்டன்பர்க் முன்வைத்த இந்த குற்றச்சாட்டின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு குற்றச்சாட்டு மாதபி புரி மீது எழுந்துள்ளது. அதாவது, மாதபி புரி விதிமுறைகளை மீறி அய்சிஅய்சிஅய் வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. 2017-ஆம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தது. எனினும் காங்கிரஸ் கட்சி முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு மாதபி புச்தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில் மாதபி புரி புச் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரி மும்பையிலுள்ள செபி தலைமையகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட செபி ஊழியர்கள் நேற்று (5.9.2024) ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2 மணி நேரத்துக்கும் மேல் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர்அவர்கள் கலைந்து சென்று தங்களது வழக்கமான பணிகளைத் தொடங்கினர்.
செபி தலைவர் குறித்து அதன்ஊழியர்கள் ஒன்றிய நிதியமைச்சகத்துக்கு 4.9.2024 அன்று ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர். அதில், “செபி தலைவர் மாதபி புரி, செபி கூட்டங்களில் சத்தம் போடுவது, திட் டுவது, பொது இடத்தில் அவ மானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சாதாரணமாகிவிட்டது.

செபி தலைவர் மிகக் கடுமையான, தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார். செபி ஊழியர்களின் நடவ டிக்கைகள் நொடிக்கு நொடி கண்காணிக்கப்படுகிறது.
மேலும், எட்டமுடியாத இலக்குகளை நிர்ணயித்து, பின்னர் இலக்குகளையும் மாற்றிவிடுகிறார். இதனால், ஊழியர்களின் மனநலன் பாதிக்கப்பட்டு, வேலை-வாழ்க்கை சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் ரோபோக்கள் அல்ல. செபி நிர்வாகம் பிற்போக்குத்தனமான கொள் கைகளை அமல்படுத்தியுள்ளது” என்று புகார் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *