‘மண்டல்குழுவும் திராவிடர் கழகமும்’ மற்றும் ‘உலகத் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு’ ஆகிய இரண்டு நூல்களையும் சட்டப்பேரவை மேனாள் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான இரா.ஆவுடையப்பன் வெளியிட்டார். வீரவநல்லூர் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர், திமுக ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கழக காப்பாளர்களும், வள்ளியூர், காருகுறிச்சி, வீரவநல்லூர், அயன்சிங்கம்பட்டி, மேலமெஞ்ஞானபுரம், வடகரை, திருக்குருங்குடி திமுக, தி.க., வள்ளியூர் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களும் புத்தகங்களை பெற்று மகிழ்ந்தனர். (வீரவநல்லூர், 1.9.2024)