கொல்கத்தா, செப்.5- மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் இரவுப் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத் தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த நிகழ்வு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை சி.பி.அய். தீவிரப்படுத்தி உள்ளது. மறுபுறம் இந்த நிகழ்வைக் கண்டித்து சுகாதாரத்துறையினர் உள்பட பல்வேறு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பணியில் இருந்த பெண் மருத்துவருக்கு நேர்ந்த இந்த துயரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சிறப்பு மசோதா தாக்கல்
இதைத்தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட் டம் இயற்றுமாறு ஒன்றிய அரசை முதலமைச்சர் மம்தா வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதங்களும் எழுதியுள்ளார். அதேநேரம் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வர உள்ளதாக அவர் அறிவித்தார்
இதற்காக 2 நாள் சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் 3.9.2024 அன்று தொடங் கியது. இதில் பாலியல் வன்கொடு மைக்கு எதிரான சிறப்பு மசோதாவை முதலமைச்சர் மம்தா தாக்கல் செய்தார்.
‘அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் மசோதா (மேற்கு வங்காள குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்) மசோதா 2024’ என்ற இந்த மசோதா மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர்.
ஒருமனதாக நிறைவேறியது
இந்த மசோதாப்படி, பாலியல் வன்கொடுமையினால் பெண் உயிரிழந்தாலோ அல்லது கோமா நிலைக்குச் சென்றாலோ குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்படும். மேலும் பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு வன்கொடுமை குற்றவாளிகளுக்கு பரோல் வழிமுறை இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்படும்.
மசோதா மீதான விவாதத்தின்போது கட்சி சார்பின்றி ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஒருமனதாக மசோதா நிறைவேறியது. எனினும் பா.ஜனதாவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி மசோ தாவில் சில திருத்தங்களை முன் மொழிந்தார். ஆனால் அவை ஏற்கப்படவில்லை.
முதலமைச்சர் மம்தா உரை
முன்னதாக மசோதாவை தாக்கல் செய்துபேசிய முதலமைச்சர் மம்தா கூறியதாவது:-
பாலியல் வன்கொடுமை என்பது மனிதநேயத்துக்கு எதிரான ஒருசாபம். இதுபோன்ற குற்றங்களை தடுக்க சமூக சீர்திருத்தங்கள் அவசியம்.
பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துதல், விரைவான நீதி வழங்குதல் மற்றும் குற்றத்துக்கான தண்டனையை அதிகரித் தலுக்கு இந்த மசோதா வழிவகுக்கும். மசோதா நிறைவேற்றப்பட்டதும், விசாரணை குறித்த காலக்கெடுவுக்குள் முடிப்பதை உறுதிசெய்ய ஒரு சிறப்பு அபராஜிதா படையை உருவாக்குவோம்.
இந்த மசோதா வரலாற்று சிறப்பு வாய்ந்ததும், பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியானதும் ஆகும். இந்த மசோதா மூலம் ஏற்ெகனவே இருக்கும் ஒன்றிய அரசு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைப்போம். பாதிக்கப்பட்டவருக்கும், அவரது உறவினர்களுக்கும் நீதியை திறம்பட வழங்குவோம்.
இவ்வாறு மம்தா கூறினார்.
பா.ஜனதா சட்டமன்ற
உறுப்பினர்களிடம் ஆவேசம்
அப்போது, பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என பா.ஜனதா உறுப்பினர்கள் முழக்க மிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மம்தா, பா.ஜனதா உறுப்பினர்களைப் பார்த்து ஆவேசமாக கூறியதாவது:-
இதே காரணத்துக்காக பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என நான் முழக்கமிட்டால் என்ன செய்வீர்கள்?
உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற எண்ணிக்கை அசாதாரணமாக அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வலுவான சட்டங்கள் அங்கே இல்லை. ஆனால் மேற்கு வங்காளத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றங்களில் நியாயம் பெறுகிறார்கள். எனவே இங்கே முழக்கமிடுவதற்கு பதிலாக, இந்த மசோதாவுக்கு தாமதமின்றி ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரை வலியுறுத்துங்கள்.
பெண்மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.அய்.யிடம் இருந்து நீதியை பெற விரும்பு கிறோம். குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அளிக்கவேண்டும்.
இவ்வாறு மம்தா கூறினார்.