சிகாகோவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
சிகாகோ, செப்.5- சென்னையில் ரூ.200 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஈட்டன் நிறுவனத்தின் என்ஜினீயரிங் மய்யத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சிகா கோவில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெ ழுத்தானது.
வளர்ச்சியின் அடையாளமாக திகழும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் அதிக அளவில் தொடங்கிட முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற் கொண்டு வருகிறார்.
முதலமைச்சர் முன்னிலையில் ‘சான்பிரான்சிஸ்கோ’வில் 29.8.2024 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ் டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப் ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
30.8.2024 அன்று ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங் களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடு களை மேற்கொள்ள அழைப்பு விடுத்த தோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ் நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
31.8.2024 அன்று ஓமியம் நிறுவனத் துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
3.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஈட்டன் நிறுவனத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள் ளப்பட்டது.
ஈட்டன் நிறுவனம்
ஈட்டன் கார்ப்பரேஷன் (Eaton Corporation) நிறுவனம் என்பது தரவு மய்யம், பயன்பாடு, தொழில்துறை, வணிகம், இயந்திர கட்டடம், குடி யிருப்பு, விண்வெளி மற்றும் இயக்க சந்தைகளுக்கான உற்பத்தி மற்றும் பகிர்மான பணிகளை மேற்கொள்ளும் மேலாண்மை நிறுவனமாகும். குடியி ருப்பு, வணிக கட்டடம், மின்சார வாக னங்கள், தரவு மய்யம் மற்றும் eVTOL வாகனங்களுக்கான ஆற்றல் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் நுகர்வுக்கு அவற்றின் தயாரிப்புகள் பயன் படுத்தப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் தலைமையகங்கள் அயர்லாந்து (Ireland) நாட்டின் டப்ளின் (Dublin) மற்றும் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் (Ohio) பீச்வுட் (Beachwood) ஆகிய இடங்களில் அமைந் துள்ளன. உலகளவில் 35 நாடுகளில் சுமார் 208 இடங்களில் உற்பத்தி வசதிகள் கொண்ட பார்ச்சூன் 500 நிறுவனங் களில் ஒன்றா கும். ஈட்டன் நிறுவனத்து டன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் முன்னிலையில், ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன் பாட்டு பொறியியல் மய்யத்தை (Global Utility Engineering Centre) நிறுவு வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அஷ்யூரன்ட் நிறுவனம்
பார்ச்சூன் 500 இன்சூ ரன்ஸ் நிறுவனங்களில் ஒன்று அஷ்யூரன்ட் நிறுவனமாகும். இந்நிறுவனம் அட்லாண் டாவை தலைமையிடமாக கொண்டு இடர்மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவை களை வழங்கி வருகிறது. சொத்து, விபத்து, நீட்டிக்கப் பட்ட சாதனங்களின் பாது காப்பு போன்ற பலவிதமான சிறப்பு மற்றும் முக்கிய சந்தை காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன.இந்நிறுவ னத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்காவினை அட்லாண்டாவில் அமைந் துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அஷ்யூரன்ட் நிறுவனத் திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே, அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தி யாவின் முதல் உலகளாவியதிறன் மய்யத்தை சென்னையில் நிறுவுவ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வின் போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய். தொழில் வழிகாட்டி நிறுவ னத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு உடனிருந்தனர்.
சமூகவலைதள பதிவு
சிகாகோவில் சட்டன் மற்றும் அஷ் யூரன்ட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது குறித்து சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
சிகாகோவில் மற்றுமொரு பய னுள்ள நாள், சென்னையில் ரூ.200 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில், ஈட்டன் நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பொறியியல் மய்ய விரிவாக்கத்துக் கான புரிந்துணர்வு ஒப்பந் தத்தை மேற்கொண்டேன். மேலும், இந்தியாவில் அஷ்யூரன்ட் நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மய்யம், விரைவில் சென்னையில் அமையவுள்ளதையும் உறுதி செய்தேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.