அகமதாபாத், செப்.4 குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி, நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, மீண்டும் எழுதிய துணைத் தேர்விலும் தேர்ச்சி பெற முடியாததால், மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வில், குஜராத் மாணவி இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தோல்வியடைந்திருக்கிறார். மீண்டும் அவர் ஜூன் மாதம் நடத்தப்பட்ட துணைத் தேர்வை எழுதியிருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் எடுத்து தரவரிசைப் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் ஆசையோடு இருந்த பள்ளி மாணவிக்கு பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடத்தில் தோல்வி என்ற தேர்வு முடிவு அதிர்ச்சியை அளித்திருக்கலாம். ஆனால், மீண்டும் நடத் தப்பட்ட துணைத் தேர்விலும் அவர் தோல்வியடைந்து, இந்த ஆண்டு கல்லூரியில் சேர முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார். மார்ச் மாதம் நடந்த தேர்வில் இயற்பியல் பாடத்தில் வெறும் 21 மதிப்பெண் பெற்றிருந்த மாணவி, தற் போது துணைத் தேர்வில் 22 மதிப்பெண்கள்தான் பெற்றுள்ளார். வேதியியல் பாடத்தில் மார்ச் மாதத் தேர்வில் 31 மதிப்பெண்கள் எடுத்திருந்தவர், தற்போது 33 மதிப் பெண்கள் பெற்றுள்ளார்.
ஏற்கெனவே, நீட் தேர்வில் முறைகேடு என்ற புகார் நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், நீட் தேர்வில் மதிப் பெண்தான் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அடிப்படை என்றால், இப் போது ஒன்றிய அரசு, இந்த மாணவிக்கு கல்லூரியில் சேர்க்கை அளிக் குமா என்று நீட் தேர்வில் தோல்வி அடைந்து, பொதுத் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவ, மாணவிகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள். நீட் தேர்வு முறைகேடு ஒரு பக்கம் சந்தேகத்தைக் கிளப்ப, ஒரு சாதாரண பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் தேர்ச்சி கூட பெற முடியாத நிலையில், எவ்வாறு நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் எடுத்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
ஆனால், இதற்கான பதிலும் நீட் தேர்வே தருகிறது, அதாவது, நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதுமே, நீட் தேர்வு மய்யங்கள் நாடு முழுவதும் காளான்கள் போல முளைக்கத் தொடங்கிவிட்டன. அவை, பெரும்பாலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 11ஆம் வகுப்பு முதல் பயிற்சி அளிக்கின்றன. கோட்டா போன்ற நகரங் களிலும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்குத்தான் பயிற்சி அளிப்பார்களே தவிர பள்ளிப் பாடத் தேர்வுக்கு அல்ல.
கடைசியாக தேர்வுக்கு ஒரு சில வாரங்கள் அல்லது ஒரு மாதம் மட்டுமே மாணவ, மாணவிகள் படிக்க வாய்ப்பு கிடைக்கும். முழுக்க முழுக்க ஒரு மதிப்பெண் கேள் விகளை மட்டுமே படித்து வந்த மாணவர்கள், ஒரு மாத காலத்துக்குள் பள்ளிப் பாடம் முழுவதையும் தேர் வுக்கு ஏற்றது போல படிக்க வேண்டும். இதனால், அவர் களால் பள்ளித் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியாமல் போகும் நிலை ஏற்படும். ஆனால், அவர்கள் நுழைவுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.
இதுபோன்ற நிலையில்தான், நீட் தேர் வில் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவியின் நிலையும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த மாணவிதான், குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவராக அறியப்படுகிறார். அவர் இயற்பியலில் 99.89 சதவிகிதம், வேதியியலில் 99.14 சதவிகிதம், உயிரியலில் 99.14 சதவிகிதம் எடுத்திருக்கிறார். இந்த மதிப்பெண்ணுக்கு அவர் நாட்டில் உள்ள மிகப்பெரிய மருத்துவக் கல்லூரியில் இலவசமாகவே மருத்துவம் பயில முடியும். ஆனால் என்ன அவர் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாததால், மேற்படிப்புக்காக கல்லூரிகளில் சேர முடி யாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.