சோக நினைவுகளுக்கு மத்தியில் இன்னொரு சுவையான செய்தி! 1979-இல் தந்தை பெரியார் நூற்றாண்டுவிழாவுக்கு அழைத்த கலைஞர் கருணாநிதி மன்றத்தின் நவசோதி அவர்களைக் குறித்தும், மற்ற நண்பர்களைக் குறித்தும் முதல் நாள் உரையாடலின் நடுவே சொல்லிக் கொண்டிருந்தார் ஆசிரியர். நண்பர் ஒருவரைப் பற்றிச் சொல்லத் தொடங்கிய ஆசிரியருக்கு, சட்டென அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை. ஆசிரியருடன் பழகுபவர்களுக்குத் தெரியும் – நினைவுக்கு வரவில்லை என்றால், அதை எப்படியேனும் நினைவுக்குக் கொண்டு வராமல் விடமாட்டார். அப்படி பயிற்சியால் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவர் அவர். இரண்டாம் நாள் அன்று அந்த நண்பரின் பெயரை நினைவூட்டியது – பதினொருவர் நினைவிடத்துக்கு எதிரில் இருந்த அந்த மண்டபம். கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபம் என்ற பேரைப் பார்த்த ஆசிரியருக்கு அவரது நண்பர் பெயர் நினைவு வந்தது. அவர் பெயர் வேலணை வீரசிங்கம்! அவரது நினைவாற்றலைக் கண்டு வியந்தார் பேரின்பநாயகம் அவர்கள். சிறு குழந்தையைப் போல அந்தப் பெயரைக் கண்டுபிடித்து மகிழ்ந்தது அந்த 91 வயதுக் குழந்தை!
மகிழ்ச்சியில் திளைத்த 91 வயதுக் குழந்தை
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:கருணாநிதி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
