அகர்தலா, செப், 3- மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் தீவிர வாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் 1.9.2024 அன்று தாக்குதலில் ஈடுபட்டனா்.
இதில் பெண் ஒருவா் உயிரி ழந்தார். அவரது மகள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
வடகிழக்கு மாநிலமான மணிப் பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின தகுதி கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, மோதலுக்கு முக்கிய காரணமாகும்.
இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. ஏராளமான வீடுகள் தீக்கிரைக்கப்பட்டன. இக்கலவரத்தால் இடம்பெயா்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
மாநிலத்தில் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத் தினரும், மலை மாவட்டங்களில் பழங்குடியினரும் அதிகம் வசிக் கின்றனா். இரு சமூகத்தினா் சார்ந்த தீவிரவாதிகளும் பரஸ்பரம் தாக்கு தல்களில் ஈடுபடுவதால் உயிர்ச்சேதம் தொடா்கதையாகி வருகிறது.
இந்நிலையில், மேற்கு இம்பால் மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கவுட்ருக் கிராமம் மீது மலைப் பகுதிகளில் இருந்து தீவிரவாதிகள் 1.9.2024 அன்று திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டதால், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தப்பியோடும் நிலை ஏற்பட்டது.
இத்தாக்குதலில் 31 வயது பெண் ஒருவா் உயிரிழந்தார். அவரது மகளான 8 வயது சிறுமி, காவல்துறை அதிகாரி ஒருவா் உள்பட மொத்தம் 4 போ் காயமடைந்தனா். அவா்கள் இம்பாலில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா். தாக்குதல் நடந்த கிராமத்தில் ஒன்றிய-மாநிலப் படையினா் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.