ஒன்றியத்தில் என்.டி.ஏ. கூட்டணியில் மோதல்! நிதிஷ் கட்சி பிரமுகர் பதவி விலகல்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பட்னா, செப். 3- பீகாரில் ஆளும் அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜேடியு) தேசிய செய் தித் தொடா்பாளா்
கே.சி.தியாகி பதவி விலகினார்.

அய்க்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி யிலிருக்கும் பாஜகவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பல்வேறு விடயங்களில் கருத்துகளைக் கூறிவந்த தியாகி, தற்போது செய்தித் தொடா்பாளா் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதுதொடா்பாக அய்க்கிய ஜனதா தளம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளராக இருந்த கே.சி.தியாகி பதவி விலகியுள்ளார்

இதையடுத்து, புதிய தேசிய செய்தித் தொடா் பாளராக ராஜீவ் ரஞ்சன் பிரசாத்தை பீகார் முதலமைச்சரும், கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் நியமித் துள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம், வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதா, உயா் ஒன்றிய அரசுப் பணிகளில் நேரடி நியமனம், இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினை போன்ற விடயங்களில் ஒன்றிய பாஜக அரசின் கொள்கை நிலைப் பாட்டுக்கு மாற்றாக அய்க்கிய ஜனதா தளத்தின் சார்பில் தியாகி முன் வைக்கும் கருத்துகள் கவனத்தை ஈா்த்துள்ளன.
பாஜகவுடன் கூட்டணி உறவில் இவரது கருத்துகள் விரிசலை ஏற்படுத்துவதாக அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் ஒரு பிரிவினா் அதிருப்தியில் இருந்தனா்.

எனினும், கடந்த மாதம் 23-ஆம் தேதி கட் சியின் அமைப்புப் பதவிகளில் நிர்வாகிகளை நியமித்த அய்க்கிய ஜனதா தள தலைமை, தேசிய செய்தித் தொடா்பாளா் மற்றும் அரசியல் ஆலோசகா் பொறுப்பில்
கே.சி.தியாகியை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *