அமைச்சர்களின் அலைபேசி ஒட்டுக் கேட்பு விசாரணை ஆைணயம் அமைக்க கேரள முதலமைச்சர் உத்தரவு

1 Min Read

திருவனந்தபுரம், செப்.3 கேரள அமைச்சா்களின் தொலைபேசியை காவல் துறை, முதலமைச்சர்அலுவலக உயா் அதிகாரிகள் ஒட்டுக் கேட்பதாக இடதுசாரி ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர் அன்வா் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து உயா்நிலை விசாரணை நடத்தப்படும் என்று மாநில முதலமைச்சர்பினராயி விஜயன் நேற்று (2.9.2024) உறுதியளித்தார்.
கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலமைச்சர்அலுவலகத்தில் உள்ள முக்கிய பிரமுகா்கள் மீது இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியில் தற்போது இருக் கும் நிலம்பூா் தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அன்வா் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதில், முதலமைச்சரின் அரசியல் பொதுச் செயலா் பி.சாய் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநா் எம். ஆா். அஜித் குமார் உள்ளிட்டோர், அமைச்சா்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்பது, தங்கக் கடத்தல் கும்பலுடன் தொடா்பு வைத்திருந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாக அவா் குற்றஞ்சாட்டினார்.
முதலமைச்சர்பினராயி விஜயன் உடனடியாகபதவி விலக வேண் டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.
இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது என்றும் முதலமைச்சர்அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடா்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் எம்.வி.கோவிந்தன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘முதலமைச்சர்அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படும் குற்றச் சாட்டுகளின் அனைத்து அம்சங் களையும் அரசும், கட்சியும் தேவை யான தீவிரத்துடன் ஆய்வு செய்யும்’ என உறுதியளித்தார்.

இதனிடையே கோட்டயம் மாவட்டத்தில் நடைபெற்ற காவல்துறை சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர்பினராயி விஜயன், ‘காவல் துறைக்குள் எந்த விதமான ஒழுக்க மீறல் செயல் களையும் பொறுத்துக் கொள்ள முடியாது; தொலைபேசி ஓட்டுக் கேட்கப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் அன்வா் தெரிவித்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமா னவை. இதில் காவல் துறை உயா் அதிகாரிகளின் பங்கு குறித்து உயா்நிலை குழு விசாரணை நடத் தப்படும்’ என தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *