14,421 கோடி யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு

1 Min Read

புதுடில்லி, செப்.3 இந்தியா வின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14,421 கோடி யூனிட்டுகளாகக் குறைந் துள்ளது. இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 14,421 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 4.7 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தியாவின் மின் நுகா்வு 15,132 கோடியாக இருந்தது. இந்திய வானிலை ஆய்வகத் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் சராசரியாக 287.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமான 248.1 மி.மீ மழையை விட 16 சதவீதம் அதிகமாகும்.
இதனால் வெப்பநிலை குறைந்து வீடுகளிலும் பிற இடங்களிலும் குளிரூட்டிகளை இயக்க வேண்டியதன் அவசியம் குறைந்தது. இது, கடந்த ஆகஸ்ட் டில் மின் நுகா்வுக் குறைந்ததில் முக்கிய பங்கு வகித்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *