பதஞ்சலி தயாரிப்பில் மீன் சாறு கலப்படம்? பாபா ராம்தேவுக்கு வந்த சிக்கல் – உயர்நீதிமன்றம் தாக்கீது

2 Min Read

புதுடில்லி, செப். 2- பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் ‘திவ்யா மஞ்சன்’ தயாரிப்பில் மீனில் இருந்து பிரிக்கப்படும் சாறு கலக்கப்படுகிறது.

ஆனால், அதனை ஆயுர்வேத தயாரிப்பு எனக்கூறி ஏமாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பதஞ்சலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து இழப் பீடு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் பாபா ராம்தேவுக்கு டில்லி உயர்நீதி மன்றம் தாக்கீது வழங்கி உள்ளது.

பதஞ்சலி எனும் நிறுவனம் ஆயுர்வேத தயாரிப்புகளை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை பாபா ராம்தேவ் நடத்தி வருகிறார்.

இந்த பதஞ்சலி நிறுவனம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. சமீபத்தில் கூட விளம் பரத்தில் தவறான தகவல்களை அளித்து பதஞ்சலி தயாரிப்புகளை பிரபலப்படுத்தியாக தொடரப் பட்ட வழக்கில் பாபா ராம்தேவ் மன்னிப்புக் கோரினார்.

ஆங்கில மருத்துவம் மீது சந்தேகம் கிளப்பும் வகையிலும், குணப்படுத்தவே முடியாத நாள் பட்ட நோய், மரபணு நோய்களை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என்றும் விளம்பரத்தில் கூறியது தொடர்பாக உச்சநீதிமன்றம் பாபா ராம்தேவை கடுமையாக கண்டித்தது.

அதன்பிறகு ஆங்கில மருத் துவம் பற்றி அவதூறாக விளம்பரம் வெளியிட்ட சர்ச்சைக்கு நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினார். இதன் தொடர்ச்சியாக தற்போது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இன்னொரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது டில்லி உயர்நீதிமன்றத்தில் பதஞ்சலி தயாரிப்புக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் உண்மையில் ‘திவ்ய மஞ்சன்’ தயாரிப்பில் மீனில் இருந்து பிரித்து எடுக்கப்படும் சாமுத்ரபீன் (Sepia Officinalis) சேர்க்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி விசா ரிக்க வேண்டும். இதனை ‘யூடியூப் வீடியோவில்’ பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலலத் துறை, உணவு பாதுகாப்பு துறை, ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, ஆயுஷ் அமைச்சகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதனால் நீதித்துறை தலையிட்டு எங்களுக்கு இழப்பீடு பெற்று கொடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பான மனு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர் யதீன் சர்மா வாதாடுகையில், “இப்படியான தவறான தகவல்களுடன் பொருள் விற்பனை செய்வது என்பது மருந்து மற்றும் காஸ்மெட்டிக்ஸ் சட்டத்தை மீறுவதாகும்.

மேலும் தற்போது வெளியான இந்த தகவல் எங்களை மிகவும் காயப்படுத்துகிறது. ஏனென்றால் எங்களின் மத நம்பிக்கையின்படி நாங்கள் அசைவம் வகை யில் இருந்து வருவதை பயன்படுத்த மாட்டோம்’’ என வாதிட்டார்.
இதனை கேட்ட டில்லி உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவுக்கு தாக்கீது அனுப்பி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *