கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் குறித்து அவதூறாக ஆடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளர் தற்காலிக நீக்கம்

1 Min Read

சென்னை, ஆக. 8 –  மதம் தொடர்பாக ஒலிப்பதிவு வெளியிட்ட புளியந் தோப்பு போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தர விட்டுள்ளார்.

சென்னை புளியந் தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளராக ராஜேந் திரன் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த வாரம், மதம் தொடர்பாக வாட்ஸ் அப் குரூப்பில் பேசிய ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

அதில், ஆய்வாளர் ராஜேந்திரன், கிறிஸ் தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். 

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகள் மூலம் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் கவனத்துக்கு வந்தது. 

உடனே ஆணை யர் ஒலிப்பதிவு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாநகர போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையர் மயில்வாகன னுக்கு உத்தரவிட்டார். 

அதன்படி இணை ஆணையர் மயில் வாகனன், ஆய்வாளர் ராஜேந்திரனிடம் விசா ரணை நடத்தி அதற்கான அறிக்கையை சென்னை காவல் ஆணையரிடம் அளித்தார். 

அதைதொடர்ந்து, மதம் தொடர்பாக கருத் துகளை ஒலிப்பதிவாக பதிவிட்ட புளியந் தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந் திரனை, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *