கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

31.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாரபட்சமாக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை உயர் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. கேரளா அரசு தொடர்ந்த வழக்கில் திருப்பம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சிவாஜி சிலை சேதமடைந்து கீழே விழுந்ததற்கு, மன்னிப்பு கோரினார் மோடி.
* அரசியல் தளத்தில் ராகுலின் செல்வாக்கு உயர்ந்து வருவதை பாஜக தலைவர்கள் உணர்ந்துள்ளனர் என்கிறது தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தனது சொந்த அறக்கட்டளைக்கு ஒதுக்கியது மகாராட்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவையில் உள்ள சிவசேனா அமைச்சர் சஞ்சய் ரத்தோட் என்பது அம்பலமானது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த செல்வதாக சொல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் பக்கம் செல்லாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி.
தி இந்து:
* அயோத்தி மீதான பாஜகவின் பற்று உணர்வுபூர்வ மானது அல்ல, மாறாக நிலம் மற்றும் லாபம் தொடர் பாக ரியல் எஸ்டேட் பேராசை என அகிலேஷ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* 2024-2025 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 15 மாதங்களில் இல்லாத அளவு 6.7 சதவீதமாக குறைந்துள்ளது,

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *