ஹிந்தி பேசும் மாநிலங்களில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்’ என, ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி விகிதம் மத்திய கல்வி வாரியத்தில் 12 சதவீதமாகவும், மாநில கல்வி வாரியத்தில் 18 சதவீதமாகவும் உள்ளது.
மாநில அளவில், 10 ஆம் வகுப்பில் மத்தியப் பிரதேசத்திலும், பிளஸ் 2 வகுப்பில் உத்தரப்பிர தேசத்திலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
முந்தைய கல்வியாண்டை ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது
தோல்விப் பட்டியலில் மத்தியப் பிரதேசம் முதலிடத்திலும் உத்தரப்பிரதேசம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் லட்சணம் இதுதான்
Leave a Comment