1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில், சிறை சென்றவரான சென்னை சூளைமேட் டைச் சேர்ந்த திமுக வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (30.8.2024) அவரது துணை வியார் ம.புஷ்பா மணி, மகள்கள்: க.கவிதா கணேசன், க.சரண்யா, கணேஷ் பிரபு, பேரன் பேத்திகளான மாஸ் ஜி.கே.ஆகாஷ், கவுதம், ஜி.எஸ். ஆதித்வருண், ஜி.கே. அட்சய நிவாசினி, ஜி.எஸ்.தருண்மித்ரன் ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
– – – – –
கல்லக்குறிச்சி மாவட்ட கழக மேனாள் தலைவரும், பட்டதாரி ஆசிரியரும், சுயமரியாதைச் சுடரொளியுமான அ. கூத்தன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை (30.8.2024)முன்னிட்டு,நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரமும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரமும் சேர்த்து மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் கல்லக்குறிச்சி மாவட்ட கழக மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன்.
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
திருவாரூரைச் சேர்ந்த க.சி.ராஜா தனது 71ஆவது பிறந்த நாளை (30.8.1953) முன்னிட்டு நேற்று (29.8.2024) கழக துணைத் தலைவரை நேரில் சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கினார்.