தொழில்நுட்ப காரணங்களால் கடவுச்சீட்டு சேவை இணையதளம் 3 நாட்கள் இயங்காது என அறிவிப்பு

1 Min Read

புதுடில்லி, ஆக 28 தொழில்நுட்ப காரணங்களால் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவை இணைய தளம் வரும் 29-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தொழில் நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக கடவுச்சீட்டு சேவை இணையதளம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கான அனைத்து நேர்காணல்களும் ரத்து செய்யப்படுகின்றன. அன்றைய நாளில் நேர்காணல் உறுதி செய்யப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ் செய்தி மூலம் அடுத்த நேர்காணல் குறித்த தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *