புதுடில்லி, ஆக 28 தொழில்நுட்ப காரணங்களால் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவை இணைய தளம் வரும் 29-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தொழில் நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக கடவுச்சீட்டு சேவை இணையதளம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கான அனைத்து நேர்காணல்களும் ரத்து செய்யப்படுகின்றன. அன்றைய நாளில் நேர்காணல் உறுதி செய்யப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ் செய்தி மூலம் அடுத்த நேர்காணல் குறித்த தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.