தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி நிறுவனம் மூலம் (Outsourcing-HR Agency) பணி அமர்வு செய்திடும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பணியிடங்கள் முற்றிலும் பெண் விண்ணப்பதாரர்களால் நிரப்பப்பட இருக்கின்றன . இதற்கான கல்வித் தகுதி , எப்படி விண்ணப்பிப்பது ? யார் விண்ணப்பிக்கலாம் ? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் .
சமுதாய அமைப்பாளர்
காலியிடங்கள்: 08
ஊதியம்: மாதம் ரூ.14,000 முதல் ரூ.16,000 வரை
கல்வி தகுதி: ஏதேனும் ஓர் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகள் பெற்றெடுத்தல் வேண்டும். தகவல் தொடர்பில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை நகர்ப்புற வாழ்வாதார மய்யத்தில் நேரடியாகவோ அல்லது https://virudhunagar.nic.in/ என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நகர்ப்புற வாழ்வாதார மய்யத்தில் 05.09.2024 தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.