குஜராத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அகமதாபாத் ஆக 08 எதிர் வரும் மக்களவை தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட் டியிடும் என்றும், இந்த முறை 26 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்றும் அம்மாநில ஆம் ஆத்மி தலை வர் இசுதன் காத்வி தெரிவித்தார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட்டியிடும் என்று குஜராத் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இது தொடர்பாக குஜராத் ஆம் ஆத்மி தலைவர் இசுதன் காத்வி கூறியதாவது:  ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இரண்டும் அய்.என்.டி.அய்.ஏ. கூட்டணியில் அங்கம் வகிக் கின்றன. இந்த தேர்தல் கூட்டணி குஜராத்திலும் அமல்படுத்தப்படும். கூட்டணி குறித்த  பேச்சுக்கள் இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சியும், காங் கிரசும் எதிர்வரும் மக்களவை தேர்தலில் குஜராத்தில் சீட்-பகிர்வு பார்முலாவின் கீழ் போட்டியிடுவது உறுதி. 

ஆம் ஆத்மி

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், இந்த முறை குஜராத்தில் 26 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். 

எங்கள் கட்சி வேட் பாளர்களை நிறுத்து வதற்கான இடங்களை ஏற்க னவே ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆம் ஆத்மி தலைவர் இசுதன் காத்வி அறிவிப்பு குறித்து  காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் மணிஷ் தோஷி கூறுகையில், 

இந்த விஷயத்தில் எங்களது தேசிய தலைவர்களின் வழி காட்டுதல்களை குஜராத் காங்கிரஸ் பின்பற்றும் என்று தெரிவித்தார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *