கடந்த 5 ஆண்டுகளில் 18,179 குழந்தைகள் தத்தெடுப்பு – ஒன்றிய அரசு தகவல்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக. 28- தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஒன்றிய தத்தெடுப்பு வள ஆணையம் பதில் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து 18 ஆயிரத்து 179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிறப்பு குழந்தைகள் எனப்படும் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் வெறும் 1,404 பேர் மட்டுமே.
கடந்த மாதம் 5ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் 420 சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்புக்கு காத்திருப்பதாகஒன்றிய தத்தெடுப்பு வள ஆணையம் தெரி வித்துள்ளது. அதே சமயத்தில், ஆரோக்கிய மான குழந்தைகளை தத்தெடுப்பதில் போட்டி நிலவுகிறது.

19 மாநிலங்களில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், தத்தெடுக்கப்படுவதற்கென யாருமே இல்லை. 2 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளில் 25 பேர் மட்டுமே தத்தெடுக்கப்படுவதற்கு காத்திருக்கின்றனர். சிறிதளவு குறைபாடு இருந்தாலும், சிறப்பு குழந்தைகளை தத்தெடுக்க யாரும் முன்வருவது இல்லை என்று தெரிய வந்துள்ளது.அதே சமயத்தில், வெளிநாடுகளில் சிறப்பு குழந்தைகளை தத்தெடுப்பவர் களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படு வதாக ஒன்றிய தத்தெடுப்பு வள ஆணையத்தின் மேனாள் தலைவர் தீபக்குமார் சுட்டிக்காட்டினார். தான் தலைவராக இருந்தபோது, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிகமாக தத்தெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *