தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? மக்களவையில் டி.ஆர். பாலு

Viduthalai
3 Min Read

இந்தியா, தமிழ்நாடு

புதுடில்லி, ஆக.9- ஒன்றிய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத் தின் மீது மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர். டி.ஆர்.பாலு பேசியதாவது:-

நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தீமைகளை அழிக்க வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கை யில்லா தீர்மானம்.

தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் ஒன்றிய அரசு நடத்துகிறது. பிரதமர் நரேந்திரமோடி எங்கு சென்றாலும் திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பேசுகிறார். ஆனால், தமிழ் நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை. பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் கட்டு மானப் பணிகள், 5 ஆண்டுகளாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை. 

ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் ஒன்றிய அரசு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2,000 கோடி கூட ஒதுக்க முடியவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வேலையின்மை அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெரும் பான்மை மக்களை வைத்து சிறுபான்மையின மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம், வேலை வாய்ப்பு, உள்ளிட்ட எந்த வாக்குறுதி யையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. 

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. சட்ட மன்றம், நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 13 ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. முன்பு குஜராத்தில் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடக்கிறது. மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஒன்றிய அரசு தடுக்கவில்லை. உலக நாடுகள் பாராட்டிய, சேது சமுத்திரத்திட்டம் சங் பரிவார் அமைப்பால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காங் கிரஸ்-திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கிடப்பில் போட்டுள்ளீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். கவுரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மூன்று முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மணிப்பூர் வன்முறை குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும், மணிப்பூர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர் மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நேற்று (8.8.2023) தொடங்கியது. அமளி காரணமாக 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட மக்களவை மீண்டும் கூடியது.

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கவுரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மூன்று முக்கிய கேள்வி களை முன்வைத்தார். 1.மணிப்பூர் வன்முறை பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் பிரதமர் மோடி இதுவரை ஏன் மணிப்பூர் செல்லவில்லை..?

2. மணிப்பூர் காட்சிப் பதிவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் 80 நாட்களுக்கு பிறகே பதில் அளித்தார்..? அந்த பதிலும் வெறுமனே 30 வினாடிகள் மட்டுமே இருந்தன. 3.மணிப்பூர் வன்முறை தொடர்பாக மாநில முதலமைச்சர் பைரன் சிங்கை பிரதமர் மோடி பதவியிலிருந்து நீக்காதது ஏன்..? 

இவ்வாறு அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *