தோறும் கழகக் கொடியேற்றுதல் – மாலையில் பெரியார் பட ஊர்வலம்
உரத்தநாடு, ஆக.26- உரத்தநாடு வடக்கு ஒன்றியம் நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (25.8.2024) மாலை உரத்த நாடு பெரியார் மாளிகையில் நடை பெற்றது.
திராவிடர் கழக உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு தலைமையேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட தலைவர் சி அமர்சிங் ஆகி யோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கூட்டத்தின் நோக்கமான செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா எழுச்சியோடு நடத்தப்பட வேண்டும் என்றும் கழகத்தின் அமைப்பு பணிகள் மற்றும் களப்பணிகளில் தோழர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு புதிய தோழர்களை இயக்கத்தில் இணைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கருத்துரையாற்றினார்.
மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.ராஜ வேல், மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட துணை செயலாளர் ஆ.உத்தி ராபதி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, ஒன்றிய தொழிலாளர் அணி செய லாளர் கோவி.இராமதாஸ், ஒன்றிய துணை செயலாளர் கக்கரை கோ ராமமூர்த்தி, உரத்தநாடு நகர தலைவர் பேபி ரே.ரவிச்சந்திரன், நகர செயலாளர் பு.செந்தில்குமார், நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன், நகர இளைஞரணி செயலாளர் ம.சாக்ரடீஸ், தஞ்சை ஒன்றிய துணைச் செயலாளர் நா.வெங்கடேசன், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் இரா.ராஜதுரை, ஒன்றிய மாணவர் கழக தலைவர் க.ஆதவன், நகர துணை தலைவர் சக்திவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்பிரமணியன், ஒன்றிய மாணவர் கழக தோழர் செழியன், மாவட்ட இணை செயலாளர் ஞான சிகாமணி, ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் சசிகுமார் ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்திற்கான தங்களது செயல்பாடுகள் குறித்து கருத்துரையாற்றினர்.
பஞ்சநதிகோட்டை கிளைக் கழக தலைவர் பாரதிதாசன், சடையார்கோயில் கிளைக்கழக தலைவர் குழந்தைவேலு, தெற்கு நத்தம் அன்பழகன், லெட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், நெடுவாக்கோட்டை முருகையனின் வாழ்விணையர் பாக்கியம், சடையார்கோவில் கோவிந்தராஜனின் தாயார் முத்து லட்சுமி அம்மாள், கண்ணத்தங்குடி கீழையூர் குமரவேல் வாழ்விணையர் கலையரசி ஆகியோரின் மறை விற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங் கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது எனவும், 4.8.2024 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனவும், அறிவுலக ஆசான் தந்தை பெரி யார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழாவினை மிக எழுச்சியுடன் செப்டம்பர் 17 அன்று கொண்டாடிடும் வகையில் உரத்தநாடு நகரம், உரத்தநாடு வடக்கு ஒன்றியம் முழுவதும் பெரியார் சிலை உள்ள இடங்களில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், மற்ற இடங்களில் பெரியார் படத் திற்கு மாலை அணிவித்தும், அனைத்து கிளைக் கழகங்களுக்கும் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று கழகக் கொடியினை ஏற்றியும், அனைத்து கிளைகளிலும் ஒலிபெருக்கி வைத்து இயக்கப் பாடல்களை ஒலிபரப்பியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்வுடன் கொண்டாடுவது எனவும், அன்று மாலை உரத்தநாட்டில் பெரியார் பட ஊர்வலத்தை எழுச்சியோடு நடத்துவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள கழகத் தோழர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவும், தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழாவினை முன் னிட்டு தஞ்சை மாநகரத்தில் செப்டம்பர் 22 அன்று நடைபெறும் பெரியார் பட ஊர்வலத்தில் உரத்தநாடு நகரம், உரத்தநாடு வடக்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து தோழர்களும் பங்கேற்று சிறப்பிப்பது எனவும், செப்டம்பர் 5 அன்று தஞ்சாவூர் ஓரியண்டல் டவர் திருமண மண்டபத்தில் மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமியின் மகன் நா.பிரபாகரன் மணவிழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
அதில் கழகத் தோழர்கள் அனை வரும் பங்கேற்பது எனவும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது
புதிய பொறுப்பாளர்கள்
உரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் பஞ்சநதிக் கோட்டை க. பாரதிதாசன்.
நெல்லுப்பட்டு கிளைக் கழகம்
கிளைக் கழக தலைவர் – சி.நாகராசு, கிளைக் கழக செயலாளர் – மா.இராவணன், கிளைக் கழக துணை தலைவர் க.மாணிக்கம்.