புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அமைச்சர் முத்துசாமி பேட்டி

1 Min Read

கோவை, ஆக.26- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
கோவையில் 1,542 உணவுப் பங்கீட்டுக் கடைகள் இருக்கின்றன. 11 லட்சத்து 42 ஆயிரம் குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 34 லட்சம் மக்கள் பயனடைகிறார்கள். 6,000 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக தற்போது 750 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துறைகளிலும் நடைபெறும் பணிகள் குறித்தும் மக்கள் நலன் குறித்தும் முதல்-அமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நியாயவிலை கடைகளில் பொருட்கள் வழங்கல் பணிகளில் தொய்வு காணப்பட்டது உண்மை. ஆனால் தற்போது 90 சதவீதம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு முத்துசாமி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *