தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறையின் சாதனைகள்!

viduthalai
4 Min Read

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அவன்
காணத் தகுந்தது வறுமையாம்
பூணத் தகுந்தது பொறுமையாம்”

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழி லாளர்கள் வாழ்வின் அவல நிலையைச் சுட்டிக் காட்டி அவர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற் சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி இரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழி லாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்! திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம்.
தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலா ளர்களின் நலம்நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.

தொழிலாளர் நலத் துறைக்குத் தனி அமைச்சகம்.

1969இல் முதலமைச்ச ராகப் பொறுப்பேற்ற கலைஞர் தலைமையில் அமைந்த திராவிட முன் னேற்றக் கழக அரசுதான் தொழிலாளர் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனியே தொழிலாளர் நலத் துறையையும், தொழிலாளர் நல அமைச்சகத்தையும் ஏற்படுத்தியது

மே நாளுக்கு ஊதியத் துடன் விடுமுறை 1969ஆம் ஆண்டில் மே முதல் நாளை ஊதியத்துடன் கூடியபொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி தொழி லாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது.
விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக்  கூலி நிர்ணயம்

1969-இல் கணபதியா பிள்ளை பரிந்துரையை ஏற்று, அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப் பட்டது. பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கல் சூளை, உப்ப ளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழி லாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது தி.மு.க. ஆட்சி.

விவசாயத் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு இலவச மனைப் பட்டா

விவசாய நிலங்களில் குடிசைகள் போட்டு வாழ்ந்த தொழிலாளர்கள் நிலச் சொந்தக்காரர்களால் எந்த நேரத்திலும் வெளி யேற்றப்படும் அவலமான சூழ்நிலையில் வாழ்ந்தனர்.

அவர்கள் நலன் காத்திட 1971இல் “குடியிருப்பு அனுபோக தாரர்கள் சட்டம்” கொண்டு வந்து 1 லட்சத்து 73 ஆயிரத்து 748 விவசாயத் தொழிளர் களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டு மனை களை அவர்களுக்கே சொந்தமாக்கி இலவச மனைப் பட்டா வழங்கி மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

நாங்கள் இரத்தம் சிந்தியும் நிறைவேற்ற முடியாத இந்தச் சாத னையை கலைஞர் ஒரே ஒரு சொட்டு மையினால் நிகழ்த்தியுள்ளார் என்று முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மணலி கந்தசாமி கலைஞரை பாராட்டினார்.

15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம்

15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து, கிடைத்த உபரி நிலங்களை இலட்சக்கணக்கான ஏழை விவசாயத் தொழிலாளர் களுக்கு வழங்க வழிவகை செய்தது; தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல், “பணிக் கொடை” வழங்கும் திட்டம் கண்டது; விபத்து களால் பாதிக்கப்படும் தொழிலாளர்களைக் காப்பதற்காகத் தொழில் விபத்து நிவாரண நிதி திட்டம் உருவாக்கியது; குடும்பங்கள் கையினால் செய்யப்படும் தீப்பெட்டி மீதான 8 சதவீத விற்பனை வரியை ரத்து செய்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுத்தது.

மே நாள் நூற்றாண்டு விழாவும் மே தினப் பூங்காவும்

மே நாள் நூற்றாண்டு விழாவினையொட்டி 1990இல் சென்னை நேப்பியர் பூங்காவிற்கு “மே தினப் பூங்கா” எனப் பெயர் சூட்டி, அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்தது முதலான பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்த திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறை வேற்றி வருகிறேன்.

ரூ.1,551 கோடியில் 20 நல வாரியங்கள் மூலம் நலத் திட்ட உதவிகள்

20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற 16 இலட்சத்து 499 உறுப்பினர்கள் புதிதாக பதிவு செய்யப் பட்டுள்ளனர். மொத்தம் 18 இலட்சத்து 46 ஆயிரத்து 945 தொழிலாளர்களுக்கு 1,551 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டுள்ளன.

ரூ.14.99 கோடியில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் நலத் திட்ட உதவிகள்
தமிழ்நாடு தொழிலா ளர் நல வாரியத்தின் மூலம் மட்டும் 26 ஆயிரத்து 649 தொழிலாளர்களுக்கு 14 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப் பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளன.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *