வருமான வரிச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படுகிறது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி. ஆக.24- வருமான வரிச் சட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கு குழு தனது பணிகளை தொடங்கியுள்ளது என்றும் இன்னும் 6 மாதத்தில் புதிய வரிச் சட்டங்கள் தயார் ஆகிவிடும் என்று ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் தெரிவித்தார். 2024-25ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ​​வருமான வரிச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும். சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், படிக்கவும் புரிந்து கொள்ளவும் எளிதாக் குவதே இதன் நோக்கம்.
இது தகராறுகள், வழக்குகளை குறைத்து வரி செலுத்துவோருக்கு வரி செலுத்துவதை உறுதியாக்கும். இது வழக்குகளில் சிக்கும் கோரிக்கையை குறைக்கும். இதை 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இந்தியாவில் வருமான வரித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் கலந்து கொண்டனர்.

இதில் ரவி அகர்வால் பேசும் போது,‘‘கடந்த 1961ஆம் ஆண்டு உருவாக் கப்பட்ட வருமான வரி சட் டத்தில் மேம்பாடு ஏற்படுத் துவதற்கான பகுதி களை கண்டறிந்து அதில் திருத்தங்கள் மேற் கொள்வதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த வருமான வரிதுறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பழைமையான வருமான வரிச் சட்டங்கள் தற்போதைய பொருளாதார தேவைக்கு ஏற்ப மாற்றப்படும்.
அந்த குழுவினர் திருத் தங்களை மேற்கொள்ள வேண்டிய பகுதிகளை அடையாளம் காண வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். இதற்கான வேலை நடந்து வருகிறது. நாட்டிற்கு புதிய நேரடி வரி சட்டத்தை நாட்டுக்கு வழங்குவதற்கான சிறந்த வழியை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் அறிவித்த படி குறிப்பிட்ட 6 மாத காலத்திற் குள் இந்த சட்டத்தை மறு ஆய்வு செய்யும் பணி முடிக் கப்படும்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *