பிஜேபி கூட்டணியில் எதிர் நிலைப்பாடு? வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு

2 Min Read

புதுடில்லி, ஆக.24 இரு நாடுகள் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ஆம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த நிலையில், வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களுடன் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு கடந்த 8-ஆம் தேதி தாக்கல் செய்தது. வக்புவாரியத்தில் முஸ்லிம் பெண்களைசேர்ப்பது, முஸ்லிம் அல்லாதவர்களும் இடம் பெற லாம் என்பதுஉள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

‘‘சச்சார் கமிட்டி பரிந்துரைப்படி இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மாஃபியா கும்பலின் பிடியில் இருந்து வக்பு வாரிய சொத்துகளை மீட்பதே இதன் நோக்கம்’’ என்று ஒன்றிய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். ஆனால், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப ஒன்றிய அரசு பரிந்துரை செய்தது.பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்து வருகிறது.
மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் சிராக் பாஸ்வான், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுஆகியோர் ஏற்கெனவே கேள்விஎழுப்பினர். ஆனால், தே.ஜ. கூட்ட ணியில் உள்ள நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளம் கட்சி இந்த மசோ தாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தது. இக்கட்சியின் எம்.பி. ராஜீவ் ரஞ்சன் இந்த மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலும் பேசினார்.

இந்நிலையில், பீகார் முதல்வரும், அய்.ஜ.த. கட்சித் தலைவரு மான நிதிஷ் குமாரை, மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான் சந்தித்து, வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் உள்ள சில அம்சங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த சட்டத் திருத்தம் குறித்து முஸ்லிம்கள் அச்சம் தெரிவிப்பதாக, முதலமைச்சருக்கு நெருக்கமான நீர்வளத் துறை அமைச்சர் விஜயகுமார் சவுத்ரியும் கூறியுள்ளார்.
அய்.ஜ.த கட்சியின் இதர தலை வர்கள், சட்டமன்ற உறுப்பினர் குலாம் கவுஸ் உள்ளிட்டோரும் இது தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அய்ஜத செயல் தலைவர் சஞ்சய் ஜா, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான்ஆகியோர், ஒன்றிய அமைச்சர் கிரிண் ரிஜிஜுவை சந்தித்து வக்புவாரிய சட்ட திருத்தத்துக்கு மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரி வித்துள்ளனர். பீகாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கஉள்ளது. மாநில மக்கள்தொகையில் 18 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *