151 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குப்பதிவு

Viduthalai
1 Min Read

புதுடில்லி,ஆக.23- இந்தியாவில் தற்போது பதவியில் இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் களும் கடந்த 2019 முதல் 2024 வரை நடைபெற்ற தேர் தல்களில், தேர் தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த வேட்புமனுக்களை ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 135 சட்டமன்ற உறுப்பினர்கள்மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதைத் தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும், ஒடிசாவைச் சேர்ந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் 2 நாடாளு மன்ற உறுப்பினர்கள் மற்றும் 14 சட்டமன்ற உறுப்பினர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-இன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை அல்லது வாழ்நாள் சிறைத் தண் டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் கட்சி வாரியாக, பெண் களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அதிகபட்சமாக பா.ஜ.க.வைச் சேர்ந்த 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 17 நாடாளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *