‘மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதத்தால் 12 கோடி இந்தியர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை’ ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது ஜெய்ராம் ரமேஷ் சாடல்

Viduthalai
1 Min Read

புதுடில்லி,ஆக.23- இந்தியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு கரோனா நெருக்கடி காரணமாக கணக்கெடுப்பு பணிகள் மேற் கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த மாதம் முதல் மேற்கொள்ள ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனிடையே, மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஏற்பட்ட தாமதத்தால் 12 கோடி இந்தியர்களுக்கு ரேசன் கிடைக்கவில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித் துள்ள பேட்டியில், “மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் மட்டுமே செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் 3.5 ஆண்டுகாலம் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013 அல்லது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேசன் பொருட்களை பெற்றுவந்த சுமார் 12 கோடி இந்தியர்களுக்கு தற்போது ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை.
மக்கள்தொகை கணக்கெ டுப்பை நடத்தும்போது எஸ்.சி., எஸ்.டி. மக்கள்தொகை தொடர்பான விவரங்களும் சேக ரிக்கப்படுகின்றன. இந்நிலையில், தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில், ஓ.பி.சி. பிரிவினரின் விவரங்களையும் சேர்த்து சேக ரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு செய்தால், அதுவே ஜாதிவாரி கணக்கெடுப்பாக மாறிவிடும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகளே மேற்கொள்ள லாம். ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது ஒன்றிய அரசின் பணியாகும். எனவே, ஒன்றிய அரசு தனது பொறுப்பை நிறைவேற்ற வேண் டும்” என்று தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *