மும்பை, ஆக.18- நாடாளுமன்ற தேர்த லில் பா.ஜனதா பெரும் பான்மை இழந்த போதி லும், அரசமைப்பு சட்டம் மீதான அச்சுறுத்தல் முடிவுக்கு வரவில்லை என்று சரத்பவார் பேசி னார்.
ராகுல்காந்திக்கு பின்வரிசையில் இடம்
டில்லி செங்கோட்டை யில் நடந்த சுதந்திர நாள் விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்காமல், 5ஆவது வரிசையில் இடம் ஒதுக்கி அவரை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது. இதுபற்றி 16.8.2024 அன்று மும்பையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியான ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் (எஸ். பி.) கட்சி தலைவர் சரத்பவார் பேசும் போது, ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:-
பிரதமர் பதவிக்கு வழங்கப்பட வேண்டிய கவுரவத்தை போல, எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய கவுரவத்தை வழங்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சர் பதவி தகுதிக்குரியது. ஆனால் டில்லியில் நடந்த சுதந்திர நாள் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு ஒன்றிய அமைச்சர்கள் வரிசையில் இருக்கை ஒதுக்காமல் அவரை ஒன்றிய அரசு அவமதித்து விட்டது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே ஆகியோரின் கவுரவம் காக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.
அச்சுறுத்தல் தொடருகிறது
வாஜ்பாய் ஆட்சியின் போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த எனக்கும், மன்மோகன்சிங் ஆட்சியின் போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜுக்கும் சுதந்திர நாள் விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்க் கட்சி தலைவர்களை மதிப்பதில்லை.
இதேபோல பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கும் மதிப்பு கொடுப்பதில்லை. நிதி நிலை கூட்டத் தொடரின் போது அவர் ஒரு நாள் கூட அவைக்கு வரவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் நாடாளுமன்ற நடை முறைகளை பற்றி கவலைப்படுவதில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மெஜாரிட்டியை இழந்த போதிலும், அரசமைப்பு சட்டத்தின் மீதான அச்சு றுத்தல் தொடர தான் செய்கிறது. அந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.