பலமிக்க கண்ணாடி

1 Min Read

அரசியல்

கண்ணாடியை வெட்டுவதற்கு வைர முனையை பயன்படுத்துவர். ஆனால், அத்தனை உறுதியான வைரத்தின் மீதே கீறலை ஏற்படுத்துமளவுக்கு உறுதியான கண்ணாடியை சீன விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.

யான்ஷான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உலகின் மிக வலுவான கண்ணாடியை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். வைரத்தையே பிளக்குமளவுக்கு பலத்தையும், ஒளி ஊடுருவும் தன்மையும் கொண்டதாக அந்தக் கண்ணாடி உள்ளது.

‘ஏ.எம்., 3’ என்று பெயரிடப்பட்டுள்ள இக்கண்ணாடிக்கு இன்னொரு பலமும் உண்டு.

இது ஒரு குறைமின் கடத்தியாகவும் செயல்படும் திறன் கொண்டது. எனவே, சூரிய மின் தகடுகளில் ஏ.எம்.,3யை பயன்படுத்த முடியும் என யான்ஷான் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட ஏ.எம்.,3 கண்ணாடியை அணிகலனா கவும், பூமியை அலங்கரிக்கும் சூரிய மின் பலகைகளாகவும் தயாரிக்க முடிவது, ஆச்சரியமான செய்திதான்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *