கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை குறைந்த நாட்களில் அதிக அறுவை சிகிச்சை செய்து சாதனை!

1 Min Read

சென்னை, ஆக.18 கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை குறைந்த நாட்களில் அதிக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை 6 மாதங்களில் 1,000 பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 6 மாதங்களில் 1,000 பேருக்கு ரத்தநாள அடைப்பை சரி செய்யும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இதயவியல் துறை தொடங்கி ஆறே மாதங்களில் ஆஞ்சியோ செய்து சாதனை.

தமிழ்நாட்டிலேயே அதிநவீன வசதிகள் கொண்ட துறையாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை இதயவியல் துறை உள்ளது. இதயவியல் துறையில் 6 மாதத்தில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோ சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கர் கருவி பொருத்தி சாதனை படைத்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை இதயவியல் துறையில் மட்டும் இதுவரை ரூ.40 கோடி சிகிச்சை இலவசமாக தரப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் -ரூ.40 கோடி சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வழங்கி வரும் தமிழ்நாடு அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *