‘‘இந்தியா கூட்டணி” துணையாக இருக்கும் கெஜ்ரிவாலுக்கு ராகுல் ஆறுதல்

1 Min Read

புதுடில்லி, ஆக.17 அநீதிக்கு எதிராக போராடும் உங்களுக்கு ‘‘இந்தியா கூட்டணி’ துணையாக இருக்கும் என திகார் சிறையில் உள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் ஆறுதல் கூறியுள்ளார்.

டில்லி ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதமும், சி.பி.அய்.யால் கடந்த ஜூன் மாதமும் கைது செய்யப்பட்ட டில்லி ஆம் ஆத்மி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (16.8.2024) அவருக்கு 56 ஆவது பிறந்த நாளையொட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் தனது ‘எக்ஸ்’ தளத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சி யுடனும் வாழ உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்து, அநீதியை எதிர்த்து போராடும் உங்களுக்கு இந்தியா கூட்டணி எப்போதும் துணையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *