மாற்றுப் பாலினத்தோர் பட்டமளிப்பு விழா!

viduthalai
5 Min Read

இன்னும் மேலே பறந்திடுங்கள்-வானம்கூட உங்களுக்கு எல்லையில்லை

பட்டமளிப்பு விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி. உரை!

சென்னை, ஆக. 16- சென்னை நுங்கம்பாக்கம் லயோலா இன்ஸ்­ டிட்யூட் ஆப் பிசி­னஸ் அட்­மி­னிஸ்ட்­ரே­ஷன் நடத்­தும் மாற்று பாலி­னத்­தா­ருக்­கான மினி – எம்.பி.ஏ. திட்­டத்­தின் பட்­ட­ம­ளிப்பு விழா­வில் கலந்து கொண்டு பட்­டங்­களை தி.மு.க. துணைப் பொதுச் செய­லா­ள­ரும், நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி 14.8.2024 அன்று வழங்­கி­னார்.

இவ்­வி­ழா­வில் கனி­மொழி கரு­ணா­நிதி பேசி­ய­தா­வது:-

“தொடர்ந்து திரு­நர் – திருங்­கைக­ளோடு பய­ணிக்­கக் கூடி­ய­வ­ராக இருந்­தி­ருக்­கி­றேன் என்­பதை குறிப்­பிட்­டுச் சொன்­னார்­கள். இந்த பய­ணம் என்­பது நமக்கு பல விஷ­யங்­களை சொல்­லித் தரு­கிற ஒன்று,

ஒரு காலத்­தில் ஏதா­வது ஒரு நிகழ்ச்­சிக்குச் சென்­றால் அப்­ப­டியே கிளம்­பிப் போவோம். அப்­போது நிகழ்ச்­சி­க­ளுக்கு வரும் மாற்­றுப் பாலி­னத்­த­வர்­கள், ‘நல்லா டிரஸ் பண்­ணிக்­கிட்டு வந்தா என்ன?’ என்று கேட்­பார்­கள். ‘ஏன் இது போதாதா?’ என்று கேட்­டால், ‘பெண்­ணாக இருப்­பதை உங்­க­ளுக்கு கொண்­டா­டத் தெரி­ய­வில்லை. அதை நீங்­கள் பெரி­தா­கவே மதிக்க மாட்­டேன் என்­கி­றீர்­கள்’ என்று சொல்­லு­வார்­கள்.

அப்­போ­து­தான் எனக்கு ஒரு முக்­கிய்­மான விஷ­யம் புரிந்­தது. நான் ஒரு பெண்­ணாக பிறந்­தேன். பெண்­ணா­கவே வளர்ந்­தேன். ஆனால் அவர்­கள் ஒரு பெண்­ணா­கவோ ஆணா­கவோ ஆவ­தற்கு போரா­டு­கி­றார்­கள், சண்டை செய்து வரு­கி­றார்­கள்.
அத­னால் நம் அத்­தனை பேரை­யும் விட அதை கொண்­டா­டும் உரிமை தகுதி அவர்­க­ளுக்கு நிறைய இருக்­கி­றது என்­பதை நாம் ஏற்­றுக் கொள்ள வேண்­டும். ஒரு கால­கட்­டத்­தில் மாற்­றுப் பாலி­னத்­த­வர் என்­ப­வர்­கள் இந்த சமு­தா­யத்­தால் அங்­கீ­க­ரிப்­ப­டா­த­வர்­க­ளாக இருந்­தார்­கள்.

பாஸ்­போர்ட் வாங்க முடி­யாது, கல்­லூ­ரி­க­ளில் சேர முடி­யாது. எந்த அரசு அங்­கீ­கா­ர­முமே இருக்­காது. அவர்­கள் இருக்­கி­றார்­கள் என்­ப­தற்­கான எந்த அங்­கீ­கா­ர­மும் கிடை­யாது. ஒரு­வர் தன்னை ஆணா­கவோ, பெண்­ணா­கவோ உணர்ந்து அதற்­கான ஆப­ரே­ஷன் பண்­ணிக்­க­ணும்னா, மருத்துவர்­கள் அதற்கு முன் வர மாட்­டார்­கள். யாரும் உதவ முன் வர மாட்­டார்­கள்.

சமு­தா­யம் அவர்­கள்­மீது கொடூ­ர­மான வன்­மு­றையை ஏவி­வி­டும் நிலைமை இருந்­தி­ருக்­கி­றது.

சுதா கூட என்­னி­டம் பல முறை வந்து, தன் உயிரை பண­யம் வைத்து சில அறுவை சிகிச்சைகளை செய்­து­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது என என்­னி­டம் சொல்­லி­யி­ருக்­கி­றார்.
பெற்­றோர்­கள் தங்­கள் மகன், மகள் என நினைத்­துக் கொண்­டி­ருந்­த­வர்­கள் ஒரு கட்­டத்­தில் நான் பெண்­ணாக, ஆணாக இருக்க விரும்­பு­ கி­றேன் என்று சொல்­லும்­போது வீட்டை விட்டே விரட்­டப்­ப­டும் சூழல் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அந்த சின்ன வய­தில் வேலைக்கு போகவோ, சம்­பா­திக்­கவோ, தன்னை பாது­காக்­கவோ முடி­யாத சூழ­லில் தத்­த­ளிக்­கும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

டான்­சர் நர்த்­தகி அவர்­களை பிபிசி பேட்டி கண்­ட­போது, ‘நீங்­கள் டான்­ச­ராக இல்­லா­விட்­டால் வேறு என்­ன­வாக இருந்­தி­ருப்­பீர்­கள்?’ என்று கேட்­ட­போது… ‘நான் டான்­ச­ராக இல்­லை­யென்­றால் செக்ஸ் ஒர்க்­க­ராக இருந்­தி­ருப்­பேன். இல்­லை­யென்­றால் தெரு­விலே பிச்­சை­யெ­டுத்­துக் கொண்­டி­ருந்­தி­ருப்­பேன்’ என்று சொன்­னார். இது­தான் நிதர்­ச­னம். இதைத் தாண்டி வேறு சாய்ஸ் இல்லை என்ற நிலை இருந்­தது.

கேள்­விக்­கு­றி­யோடு
முற்­றுப்­புள்­ளி­யா­கும் சூழல்!

ஒரு­முறை சுதா மற்­றும் சிலர் என்னை சந்­தித்து, ‘இவ்­வ­ளவு கஷ்­டங்­க­ளைத் தாண்டி சிலர் பள்­ளிப் படிப்பு முடித்­தி­ருக்­கி­றார்­கள். ஆனால் அவர்­கள் கல்­லூரி படிக்க வேண்­டும் என ஆசைப்படுகிறார்­கள். ஆனால் அங்கே ஆணா, பெண்ணா என்று கேட்­கி­றார்­கள். என்ன பதில் சொல்­வது? அவர்கள் வாழ்க்­கையே கேள்­விக்­கு­றி­யோடு முற்­றுப்­புள்­ளி­யா­கும் சூழல் இருக்­கி­றது’ என்று என்னி­டம் சொன்­னார்­கள்.

நாங்­கள் எல்­லாம் சேர்ந்து, தலை­மைச் செய­ல­கம் போகி­றோம். முத­ல­மைச்­சரை சந்­திக்க அல்ல… உயர் கல்­வித்துறை அமைச்­சரை சந்­திக்க அங்கே சென்­றோம். அப்­போது தலை­வர் கலை­ஞர்­தான் முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­றார். அவர் இறங்கி போர்­டி­கோ­வுக்கு வரு­கி­றார்.

அப்­போது முத­ல­மைச்­சர் கலை­ஞர் என்­னைப் பார்த்­து­விட்­டுக் கூப்­பிட்­டார்.
‘என்ன இங்க நின்­னுக்­கிட்­டிருக்கே? என்­னைப் பாக்­கு­ற­துக்கா?’ என்று கேட்­டார்.
நான், ‘இல்­லல்ல… உயர் கல்­வித்துறை அமைச்­சர் பொன்­மு­டியை பாக்­க­ற­துக்­காக வந்­தோம்’ என சொன்­னோம். சரி என்று சொல்லி அவர் வீட்­டுக்­குப் போய்­விட்­டார்.
அதன் பின் நாங்­கள் உயர் கல்­வித்துறை அமைச்­சர் பொன்­மு­டியை சந்­தித்­தோம். சுதா தான் உயர் கல்வி அமைச்­ச­ரி­டம் இந்த விஷ­யங்­களை எடுத்­துச் சொன்­னார். ‘நிச்­ச­ய­மாக இந்த விவ­கா­ரத்தில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கி­றோம்’ என்று அமைச்­சர் கூறி­னார்.

அதன் பின் நானும் வீட்­டுக்­குக் கிளம்­பி­விட்­டேன். பொது­வாக மதி­யம் சாப்­பிட்டு விட்டு ஒரு மணி நேர­மா­க­வா­வது தூங்­கக் கூடிய எனது அப்பா எனக்­காக காத்­தி­ருந்­தார்.
நான் வீட்­டுக்­குப் போன­தும் என்­னைக் கூப்­பிட்டு, ‘என்ன பிரச்­சினை? எதுக்­காக அவங்­களை அழைச்­சிட்டு தலை­மைச் செய­ல­கம் வந்­தி­ருந்தே?’என்று கேட்­டார்.
மாற்­றுப் பாலி­னத்­த­வர் எவ்­வ­ளவு போராட்­டங்­க­ளைத் தாண்டி அவர்­கள் வந்­தி­ருக்­கி­றார்­கள் என்ப­தை­யும், தன்­னு­டைய அடை­யா­ளத்தை அடைய போரா­டு­கி­றார்­கள், வாழ்­வ­தற்கே அவர்­கள் போரா­டு­கி­றார்­கள் என்­ப­தை­யெல்­லாம் தலை­வர் கலை­ஞ­ரி­டம் சொன்­னேன்.’

அடுத்த நொடியே அவர்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரம், கல்வி, அவர்­க­ளுக்­கான மருத்­துவ அறுவை சிகிச்சை­களை அரசு மருத்­து­வ­ம­னைக­ளில் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­கள், ரேஷன் கார்­டில் அவர்களை சேர்த்­தல் என அத்­தனை விஷ­யங்­க­ளையும் செய்து தந்­தார் தலை­வர் கலை­ஞர்.

மனித நேயத்தை
சொல்லித் தந்த பெரி­யார்!

மனித நேயத்தை சொல்­லித் தந்த தந்தை பெரி­யார் அவர்­க­ளின் வழி­யில் வந்த ஆட்சி அதே பாதை­யில் இன்­று­வரை தொடர்ந்து சென்­று­கொண்­டி­ருக்­கி­றது.
நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி மாற்­றுப்­பா­லி­னத்­தா­ரின் கல்­விக்­காக 2 கோடி ரூபாய் ஒதுக்­கி­யி­ருக்­கி­றார். அவர்­க­ளின் கல்லூரி கட்­ட­ணம், விடுதிக் கட்­ட­ணம் எல்லாவற்றையும் உறுதி செய்­தி­ருக்­கி­றார்­கள்.

நீங்­கள் ஒவ்­வொரு நாளும் வாழ்­வ­தற்கு எவ்­வ­ளவு போராட்­டங்­க­ளைக் கடந்து வரு­கி­றீர்­கள் என்று எனக்­குத் தெரி­யும். அத­னால் இந்த கல்வி என்­பது உங்­கள் மீது உங்­க­ளுக்கே ஒரு நம்பிக்கையை ஏற்­ப­டுத்­தும். யார் என்ன சொன்­னா­லும் நம்­மால் இந்த சமு­தா­யத்­தில் தலைநிமிர்ந்து நிற்க முடி­யும் என்ற நம்­பிக்­கையை உண்­டாக்­கு­வது கல்வி. அத­னால் அரசாங்கமும் இருக்­கி­றது. தீபா போன்ற அமைப்­பு­க­ளும் இருக்­கின்றன.
அத­னால் இது­போன்ற வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்­திக் கொண்டு, உய­ரப் பறந்­தி­டுங்­கள். மாற்­றுப் பாலி­னத்­தா­ருக்கு மட்­டு­மல்ல அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் நீங்­கள் இன்ஸ்­பி­ரே­ஷ­னாக மாற முடி­யும். தனது கனவு என்ன, தனது அடை­யா­ளம் என்ன என்­பதை நிர்­ண­யம் செய்­யும் அதிகாரத்தைப் பெறுங்­கள்.

இன்­னும் இன்­னும் உயரே பறந்­தி­டுங்­கள். வானம் கூட உங்­க­ளுக்கு எல்லை இல்லை. வாழ்த்துகள்”.

-இவ்­வாறு கனி­மொழி கரு­ணா­நிதி பேசி­னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *