ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி

1 Min Read

ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வடசென்னிமலை ஆத்தூரில் உள்ள கல்லூரி கருத்தரங்க அறையில் 23.8.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும். அதன் அடிப்படையில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வடசென்னிமலை, ஆத்தூர் எ. இ. டி கல்லூரியிலும், ஆத்தூர் ஜெம்கேட்ஸ் கல்லூரியிலும், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம், தலைமைக் கழகம் அமைப்பாளர் அ. சுரேஷ், ஆத்தூர் திராவிடர் கழக நகரத் தலைவர் அண்ணாதுரை, ஆத்தூர் கழக மாவட்ட செயலாளர் நீ .சேகர், பகுத்தறிவாளர்கள் கழக மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் ஆகியோர் கல்லூரி மாணவ-மாணவிகள் பேச்சு போட்டியில் கலந்து கொள்ள 06.08.2024 செவ்வாய்க்கிழமை அன்று மேற்கண்ட கல்லூரியில் கல்லூரியின் பேராசிரியர்கள் தாளாளர்களைச் சந்தித்து பேச்சுப் போட்டிக்கான அழைப்பிதழ்களை வழங்கி மாணவ மாணவிகளை பேச்சு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கோரப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *