ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி

viduthalai
1 Min Read

ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பேச்சுப்போட்டி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வடசென்னிமலை ஆத்தூரில் உள்ள கல்லூரி கருத்தரங்க அறையில் 23.8.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும். அதன் அடிப்படையில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வடசென்னிமலை, ஆத்தூர் எ. இ. டி கல்லூரியிலும், ஆத்தூர் ஜெம்கேட்ஸ் கல்லூரியிலும், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம், தலைமைக் கழகம் அமைப்பாளர் அ. சுரேஷ், ஆத்தூர் திராவிடர் கழக நகரத் தலைவர் அண்ணாதுரை, ஆத்தூர் கழக மாவட்ட செயலாளர் நீ .சேகர், பகுத்தறிவாளர்கள் கழக மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் ஆகியோர் கல்லூரி மாணவ-மாணவிகள் பேச்சு போட்டியில் கலந்து கொள்ள 06.08.2024 செவ்வாய்க்கிழமை அன்று மேற்கண்ட கல்லூரியில் கல்லூரியின் பேராசிரியர்கள் தாளாளர்களைச் சந்தித்து பேச்சுப் போட்டிக்கான அழைப்பிதழ்களை வழங்கி மாணவ மாணவிகளை பேச்சு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கோரப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *