17 ஆவது மக்களவையை உலுக்கிய ‘கேள்விக்குப் பணம்’ விவகாரம் நினைவி ருக்கிறதா? திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பி னர் மஹுவா மொய்த்ரா மீது அந்தப் பிரச்சினையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியதையும், அவரைப் பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைத்ததையும் ஒட்டுமொத்த நாடுமே மவுனமாக கடந்துசென்றது
அப்போது ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராக இருந்தவர் பாஜக உறுப்பினா் வினோத் குமார் சோங்கர். ஜனவரி மாதம் மஹுவா மொய்த்ராவை அவா் பதவி நீக்கம் செய்தது, எதிர்க்கட்சிகளின் பரவலான கண்டனத்துக்கு உள்ளானது.
மஹுவா மொய்த்ரா மீண்டும் மக்கள வைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரைப் பதவியில் இருந்து நீக்க அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்த 15 உறுப்பினர்கள் என்ன வானார்கள் என்று தெரியுமா?
அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் மூன்று பேருக்குத்தான் பாஜக மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. மூன்று பாஜக உறுப்பினர்களும் தேர்தலில் தோல்வியைத் தழுவினர். பாஜக கூட்டணி உறுப்பினர் ஒருவரும் தோல்வியைத் தழுவினார்.
‘‘அடுத்த மக்களவையில் ஒழுங்கு நட வடிக்கைக் குழுவில் ஒருவராக நீ நிய மிக்கப்படுவாய்’’ என்று ஜனவரி மாதம் மஹுவா மொய்த்ராவுக்கு ஆறுதல் அளித்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தாவின் வார்த்தை மக்களின் மீதான நம்பிக்கையின்பால் சொல்லியதாகும்.
அவர் மக்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. அந்த எண்ணம் வீண் போகவில்லை. மஹுவா மொயித்ரா வெற்றி பெற்றார். ஆனால் அவரை நீக்கம் செய்த ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இன்று அதே ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் முதன்மை உறுப்பினராக மகுவா மொய்த்ரா விதிமுறை மற்றும் தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.