வயநாடு, ஆக.15 நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று (14.8.2024) அறிவித்துள்ளார்.
மேலும், நிலச்சரிவில் காய மடைந்தவர்களுக்கு ரூ. 50,000 முதல் ரூ.75,000 வரை நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். கேரள அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்தித்த பினராயில் விஜயன் நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பினராயி விஜயன் பேசியதாவது:
‘‘வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த வர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
60 சதவிகிதத்துக்கு மேல் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 75,000, 40 – 50 சதவிகிதம் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் படுகாயமடைந் தவர்களுக்கு கூடுதலாக ரூ. 50,000 வழங்கப்படும்.
வீடுகளை இழந்து நிவாரண முகாம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கி யுள்ளவர்களுக்கு மாதம் ரூ. 6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும்.
இந்த நிவாரணங்கள் முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனை வருக்கும் இலவச தங்கும் இடங் களை அரசு ஏற்படுத்தியுள்ளது. அந்த இடங்களில் தங்குவதற்கு வாடகை வசூலிக்கப்படாது.
கல்வி சான்றிதழ், அரசு அடையாள அட்டைகள் உள்ளிட்டவை மீண்டும் வழங்க அனைத்து துறைகளும் நட வடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
வாரிசு சான்றிதழ் இல்லாமல் இழப்பீட்டு தொகையை பெற நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்” என்று தெரிவித் துள்ளார்.
வயநாடு நிலச்சரிவு: அடையாளம் தெரியாத 401 உடல் பாகங்களுக்கான டிஎன்ஏ பரிசோதனை நிறைவு!
வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 401 உடல்கள் மற்றும் பாகங்கள் டிஎன்ஏ பரிசோதனை 13.8.2024 அன்று நிறைவடைந்தது. பரி சோதனையின் முடிவின் மூலம், உடல் பாகங்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படு கிறது.
ராணுவம், சிறப்பு அதிரடிப்படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 121 ஆண்கள், 127 பெண்கள் உள்பட 248 பேரின் 349 உடல் பாகங்கள் மீட்கப் பட்டன.
இதில், 52 உடல் பாகங்கள் சிதைந் துள்ளதால் கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படும் என அந்த மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே. ராஜன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.ராஜன் கூறுகையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரிய வரும். இதுவரை மீட்கப்பட்ட உடல் பாகங்களில் 405 குருதி பாகங்கள் டி.என்.ஏ. பரிசோதனை நிறைவடைந்துள்ளன. இதுவரை 115 பேரின் குருதி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பீகாரைச் சேர்ந்த மூன்று பேரின் உறவினர்களின் ரத்த மாதிரிகள் தற்போது கிடைத்துள்ளன. பரிசோதனைகளின் முடிவுகள் வரும் போது, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது.
பரிசோதனையின் முடிவின் மூலம், உடல் பாகங்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படலாம்.
மேலும் இந்த மாத இறுதிக்குள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய் யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். வீடுகள் ஒதுக்கீடு தொடர் பான வேலைகளை மாவட்ட ஆட்சியர் செய்து வருகிறார். தற்போது அவர்களுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ள 53 வீடுகள் மற்றும் வழங்கப்படக்கூடிய எஞ்சிய வீடுகளின் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான அறிக் கையை வழங்குமாறு ஹரிசன் மலையாள தொழிற்சங்கத்திடம் கோரப் பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தொழிற்சங்க பிரதி நிதிகள் மற்றும் நிர்வாக பிரதிநிதிகள் ஆய்வு நடத்தி, எந்தெந்த தொழி லாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிக்கையை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேப்பாடி, முப்பைநாடு, வைத்திரி, கல்பட்டா, முட்டில் மற்றும் அம்பலவயல் உள்ளாட்சி எல்லைகளுக்குள் ஒரு முழுமையான வசதிகளுடன் குடியேறுவதற்கான வீடுகளுக்கு திட்ட மிடப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகள் தலைமையில் வாடகை வீடுகளுக்கான விசாரணை நடத்தப்படுகிறது. இதில், பஞ்சாயத்து உறுப்பினர்கள், வருவாய் அலுவலர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் அடங்கிய அய்ந்து பேர் கொண்ட குழு, உள்ளாட்சி எல்லைக்குள் இருக்கும் வாடகை வீடுகளைக் கண்டறிந்து அறிக்கை அளிக்கும். இதுவரை 1368 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.