கனிம வளங்களுக்கான வரியை முன் தேதியிட்டு மாநில அரசுகள் வசூலிக்கலாம்: உச்சநீதிமன்றம்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக. 15- கனிம வளங்களுக்கான வரியை மாநில அரசுகள் முன் தேதியிட்டு வசூ லிக்க உச்சநீதிமன்றம் நேற்று (14.8.2024) அனுமதி அளித்துள்ளது. கனிம வளங்களுக்கு வரிவிதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் இருப்பதாக கடந்த ஜூலை 15ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், முன்தேதியிட்டு வரியை வசூல் செய்வது தொடர் பாக சுரங்க நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு, ஒன்றிய அரசின் கோரிக் கையை நிராகரித்தனர்.

ஏப்ரல் 1, 2005 முதல் தற்போது வரையிலான வரிகளை சுரங்க நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசுகள் முன்தேதியிட்டு வசூலித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், முன்தேதியிட்டு வசூலிக்கும் வரிக்கு அபராதம் மட்டும் வட்டி போன்றவை வசூலிக்கக் கூடாது என்றும், மாநிலங்களுக்கு தவணை முறையில் 12 ஆண்டுகளில் வழங்கலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக ஒன்றிய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், ஜூலை 25 அன்று தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வில், கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உரிமை இருப்பதாக 8 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார். தற்போது கனிம வள வரியை மாநில அரசுகள் முன்தேதியிட்டு வசூலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *