பாதுகாப்புக் குறைபாடு பயனாளிகளே எச்சரிக்கை!

1 Min Read

ஆண்ட்ராய்டு கருவிகளில் தீவிர பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்ப தாக இந்திய கணினி அவசர நிலைக் குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசர நிலைக் குழு (CERT- In)’, Qualcomm, MediaTek உள் ளிட்ட பிராசஸர்களை (Processors) பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் 12, 12L, 13 மற்றும் 14இல் செயல்படும் போன் மற்றும் டேப் லெட்களில் அதிக அளவில் பாது காப்புக் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகத் தெரி வித்துள்ளது.
இந்த கருவிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடுவதாக எச்சரித் துள்ளது.

இதுபோன்று சைபர் தாக்குதல்களை குறைக்கவும், ஆண்ட்ராய்டு கருவிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் கணினி அவசர நிலைக்குழு (CERT-In) சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது.

அதன்படி, பயனர்கள் தங்கள் ஆண்ட் ராய்டு கருவிகள், கிடைக்கக் கூடிய சமீபத்திய மென்பொருள் பதிப்பில் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.
நம்பகத்தன்மை கொண்ட சோர்ஸில் இருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு கருவிகளில் ஆட்டோ அப்டேட்டை (Auto Update) ஆக்டிவேட் செய்யவும் பரிந்துரைத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *