தொலைபேசிகளில் தேவையற்ற அழைப்புகள் வராமல் தடுக்க டிராய் நடவடிக்கை!

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக. 15- நாடெங்கும் தொலைபேசிகளை பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கானோருக்கு அடிக்கடி தேவையற்ற அழைப்புகள் வந்து தொந்தரவு தருகின்றனர். தற்போது இது போன்ற அழைப்புகள் வருவது அதிகரித்து உள்ளது என வாடிக் கையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.

எனவே இதனை தடுக்கும் வகையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தொலைதொடர்பு அமைச்சகம் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில்,

”பதிவு செய்யப்படாத அனுப்புநர்கள் அல்லது பதிவு செய்யப்படாத வணிக அழைப்பாளர்கள் யாரேனும், வர்த்தக தொலைபேசி அழைப்புகளை உருவாக்கி, விதிமீறல்களில ஈடுபடுவது தெரிய வருமென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்மீது வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில், அந்த அனுப்புநரின் அனைத்து தொலை தொடர்பு விநியோகங்களையும், 2 ஆண்டுகளுக்கு

தொலைதொடர்பு நிறுவனங்கள் ரத்து செய்ய வேண்டும். இதேபோன்று அந்த அனுப்புநர் 2 ஆண்டுகளுக்கு கருப்பு பட்டியலில் வைக்கப்படுவார் என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

24 மணிநேரத்தில், அனுப்புநர் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும், பிற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு பகிரப்பட வேண்டும்.

இதனை தொடர்ந்து, அந்த அனுப்புநருக்கு வழங்கிய அனைத்து தொலைதொடர்புக்கான விநியோகங் களையும் அவர்கள், அடுத்த 24 மணி நேரத்தில் நிறுத்தி விடுவார்கள்.

அந்த அனுப்புநருக்கு புதிய தொலை தொடர்புக்கான விநியோ கங்கள் எதனையும் எந்தவொரு தொலை தொடர்பு சேவை நிறுவனங்களும் ஒதுக்க கூடாது.
இந்த உத்தரவுகளை அனைத்து தொலை தொடர்பு சேவை நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் 16ஆவது நாளில், நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகளை பற்றி சீராக தகவலை சமர்ப்பிக்க வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிராய் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகளால், ஸ்பேம் அழைப்புகள் குறையும் என்றும். வாடிக்கையாளர்களுக்கு அதன் பாதிப்புகள் வெகுவாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *