மதுரை, ஆக.15- ஆக்கிர மிப்புகளை அகற்ற பி.டி.ஓ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நேரடி அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட 14 மாவட் டங்களில் உள்ள ஊராட்சிகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட் டோர் அனுப்பிய தாக்கீதுகளை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றை விசாரித்த நீதி பதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறையினர்தான் சட்டபடி தாக்கீது அனுப்ப வேண்டும் என்றும் பி.டி.ஓ. உள்ளிட்டோர் அச்சுறுத்தும் வகையில் தாக்கீது அனுப்பக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
அஞ்சல் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு
கல்வி உதவி தொகை
சென்னை, ஆக.15 ஒன்றிய அரசின் ‘தீன்தயாள் ஸ்பர்ஷ் யோஜனா’ திட்டத்தின் கீழ், அஞ்சல் துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கும் திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, இந்தாண்டு தமிழ்நாட்டில் இருந்து 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் செப். 5-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து தகவல்கள், விண்ணப்பங்களை www.tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு 044-2854 3199 என்ற தொலைபேசி எண்ணிலும், [email protected] என்ற இ-மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.