பொங்கல் திருநாள் முதல் ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் தொடக்கம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, ஆக.15 பொங்கல் திருநாள் முதல் ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.

இந்தியாவின் 78 ஆவது சுதந்திரதின விழாவில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தியாகிகளின் கனவான அனை வருக்குமான இந்தியாவை உருவாக்கி நாம் வளர்த்து வருகிறோம்.
ஆக.15 ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள் மட்டுமல்ல, ஆனந்த இந்தியாவை உருவாக்கும் திட்டம் வகுக்கும் நாளாகும்.
சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து ‘திராவிட மாடல்’ அரசு செயலாற்றி வருகிறது.

வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பல துறைகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வருகிற பொங்கல் திருநாள் முதல் ‘முதல்வர் மருந்தகம் திட்டம்’ பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் உருவாக்கப்பட இருக்கிறது.

ஓய்வுபெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கட்டபொம்மன், வ.உ.சி., மருது சகோதரர்களின் வழித்தோன்றல் களுக்கான ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படுகிறது.

நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து பல்துறை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும் என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *