தீவிர குற்றச்சாட்டுகள் என்றாலும் பிணை வழங்க நீதிமன்றங்கள் மறுக்கக்கூடாது உச்சநீதிமன்றம் உத்தரவு

2 Min Read

புதுடில்லி, ஆக.14- தீவிர குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், சம்பத்தப்பட்ட நபருக்கு பிணை வழங்க நீதிமன்றங்கள் மறுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற காவலர் ஜலாலுதின் கான் கடந்த 2022ஆம் ஆண்டு, இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர்களுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாகவும், அவர்களுக்கு வாடகைக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவர் அடைக்கலம் அளித்த ஆட்கள், பிரதமர் மோடி வருகையின் போது வன்முறைக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும், நாட்டின் ஒற் றுமை, ஒருமைப்பாட்டுக்கு அச் சுறுத்தல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டப் பட்டப்பட்டது.

பிணையில் விடுதலை
ஜலாலுதின் கானுக்கு கீழமை நீதிமன்றங்களில் பிணை மறுக்கப் பட்டது. அதையடுத்து, அவர் பிணை கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (13.8.2024) விசார ணைக்கு வந்தது. ஜலா லுதின் கானை பிணையில் விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்துடன், பிணை அளிப்பது தொடர்பாக நீதிமன்றங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங் கினர். நீதிபதிகள் கூறியதாவது:-
அரசுத் தரப்பு ஒருவர் மீது எவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டு களையும் சுமத்தலாம். ஆனால், சட்டத்துக்கு உட்பட்டு அவருக்கு பிணை வழங்குவது பற்றி பரிசீலிப்பதுதான் நீதிமன்றத்தின் கடமையாக இருக்க வேண்டும்.

அரசியல் சாசனத்துக்கு எதிரானது
பிணை வழங்குவது விதி முறை; சிறைக்கு அனுப்புவது விதிவிலக்கு’ என்பதுதான் சட்ட தத்துவம். இந்த தத்துவம், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகிய சிறப்புச் சட்டங்களுக்கு உட்பட்ட குற்றச் செயல்களுக்கும் பொருந்தும். பிணைகோரி மனு தாக்கல் செய்யப்பட் டால், பிணை வழங்க நீதிமன்றங்கள் மறுக்கவோ, தயக்கம் காட்டவோ கூடாது. தகுதியான நபர்களுக்கு பிணை வழங்க மறுப்பது, அரசியல் சாசனத்தின் 21ஆவது பிரிவு வலியுறுத்தும் வாழும் உரிமைக்கு எதிரான செயல். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *