சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

1 Min Read

புதுக்கோட்டை, ஆக. 14- புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி கடைவீதியில், சுயமரி யாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா திராவிடர் கழக பொதுக்கூட்டம் 1.8.2024 மாலை அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டக் காப்பாளர் ஆ.சுப்பையா தலைமை வகித்தார். திருமயம் ஒன்றியத் தலைவர் அ. தமிழரசன் அனைவரையும் வரவேற்றார். புதுக்கோட்ட கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில ப.க. அமைப்பாளர் அ.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் துவக்கவுரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், ஒன்றியச் செயலாளர் க.மாரியப்பன், மாவட்ட துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, பொன் னமராவதி, ஒன்றியத் தலைவர் சித.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி, புதுக்கோட்டை நகரச் செயலாளர் ரெ.மு.தருமராசு, மகளிரணி வீர.வசந்தா, பொன்மதி, ம.மு.கண்ணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழ் நாட்டில் சுயமரியாதை கடந்த நூறு ஆண்டுகளில் செய்திருக்கும் சாதனைக ளைப் பற்றி சிறப்புச் சொற் பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் விரி வாக பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *