தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

1 Min Read

புதுடில்லி, ஆக.13 உத்தரப்பிரதேச அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கைதிகள் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தேர்தல் நடத்தை விதி பாதிக்காது என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத உ.பி. மாநில சிறைத்துறை முதன்மைச் செயலாளருக்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். காணொலிக்காட்சி மூலம் உச்ச நீதிமன்றத்தின் முன் உ.பி. சிறைத்துறை முதன்மைச் செயலர் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஒவ்வொரு வழக்கிலும் உத்தரவை எப்படி மதிக்காமல் இருக்கிறீர்கள் என உ.பி. சிறைத்துறை அதிகாரிக்கு நீதிபதி அபய் ஓகா கேள்வி எழுப்பினார். கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு எதையும் உ.பி. அரசு செயல்படுத்த மறுப்பது ஏன்?. கைதிகள் முன்விடுதலை தொடர்பான கோப்புகளை வாங்க மறுத்த அதிகாரிகள் யார் என தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உ.பி. அரசு அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் இப்படியே விட்டுவைத்திருக்காது என்று நீதிபதி அபய் ஓகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *