பகவான் என்ன செய்கிறான்? மேற்கு வங்காளத்தில் ‘பாத யாத்திரை’ மேற்கொண்ட பக்தர்கள் 6 பேர் சாலை விபத்தில் மரணம்

1 Min Read

சிலிகுரி, ஆக.13- மேற்குவங்காள மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் பக்டோக்ரா பகுதி உள்ளது. பக்தர்கள் சிலர் இந்த வழியாக சிவன் கோவில் ஒன்றிற்கு ‘பாதயாத்திரை’ சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நெடுஞ்சாலையில் வந்த சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு வந்த அந்த கார், பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறை யினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்தில் இறந்தவர்கள் பிரகலாத் ராய், கோவிந்த் சிங் (வயது 22). அம்லேஸ் சவுத்ரி (வயது 20), கனக் புர்மான் (வயது 22), பிர னாப் ராய் (வயது 28) மற்றும் படகந்த் ராய் என்று தெரியவந்தது. அந்த சொகுசு கார் கோஸ்புக்கூரில் இருந்து சிக்கிம் சென்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *